Wednesday, October 8, 2008
உளவுத்துறை: தீபாவளியை சீர்குலைக்க 600 `சிமி' தீவிரவாதிகள் திட்டம்
http://www.dailythanthi.com/article.asp?NewsID=443331&disdate=10/8/2008&advt=1
தீபாவளி பண்டிகையை சீர்குலைக்கும் வகையில் தமிழகம் உள்பட 9 மாநிலங்களில் நாசவேலையில் ஈடுபடுவதற்காக 600 `சிமி' இயக்க தீவிரவாதிகள் பதுங்கி இருப்பதாக மத்திய உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
புதுடெல்லி, அக்.8-
கடந்த ஜுலை 25-ந் தேதி பெங்களூரில் 10-க்கும் மேற்பட்ட இடங்களில்
குண்டுகள் வெடித்தன. அதைத் தொடர்ந்து குஜராத் மாநிலம் ஆமதாபாத்திலும், டெல்லியிலும் சங்கிலித்தொடர் குண்டு வெடிப்புகள் நடந்தன.
இதில் ஏராளமானோர் உயிரிழந்தனர். டெல்லியில் மீண்டும் குண்டு வெடிப்பு
நடந்தது. திரிபுரா, மராட்டிய மாநிலங்களிலும் சமீபத்தில் குண்டு வெடிப்பு
நடத்தப்பட்டது.
`சிமி' அமைப்பு
இந்த தொடர் தாக்குதல்களால் நாடு முழுவதும் போலீசார் உஷார் படுத்தப்பட்டுள்ளனர். குண்டு வெடிப்பு நடந்த மாநிலங்களில் போலீசார் விசாரணை நடத்தி ஏராளமான தீவிரவாதிகளை கைது செய்தனர்.
தடை செய்யப்பட்ட இந்திய மாணவர் இசுலாமிய இயக்கத்தைச் (சிமி) சேர்ந்த
இவர்கள், `இந்தியன் முஜாகிதீன்' என்ற பெயரில் இந்த குண்டு வெடிப்புகளை
நடத்தி இருப்பது தெரிய வந்தது.
600 தீவிரவாதிகள்
கைதான தீவிரவாதிகள், தங்களுடன் தொடர்புடைய தீவிரவாதிகள் பட்டியலையும், அவர்கள் எந்த மாநிலத்தில் பதுங்கி இருக்கிறார்கள் என்ற விவரத்தையும் அளித்துள்ளனர். அதன்படி, தமிழகம், கேரளா, ஆந்திரா, கர்நாடகம், டெல்லி, மராட்டியம், மத்திய பிரதேசம், உத்தரபிரதேசம், ராஜஸ்தான் ஆகிய 9 மாநிலங்களில் 600 தீவிரவாதிகள் பதுங்கி இருப்பது தெரிய வந்துள்ளது.
இவர்களின் பட்டியலும் தயாரிக்கப்பட்டு வருகிறது. இவர்களில் மிக முக்கிய
தீவிரவாதிகள் தனியே அடையாளம் காணப்பட்டுள்ளனர். குஜராத் குண்டு வெடிப்பு தொடர்பாக கைதான தீவிரவாதி கம்ருதீன் நகோரி, 35 தீவிரவாதிகள்
பட்டியலையும், ஆமில்பார்வேஸ் என்ற தீவிரவாதி, 125 தீவிரவாதிகள்
பட்டியலையும் அளித்துள்ளான். இவர்கள் அனைவரும் மத்தியபிரதேச மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் என்றும், பல்வேறு நகரங்களில் ஊடுருவி இருப்பதாகவும் அத்தீவிரவாதிகள் தெரிவித்துள்ளனர்.
வெளிநாட்டினருக்கு தொடர்பு
சீன நாட்டைச் சேர்ந்த 2 முஸ்லிம்களுக்கு குண்டு வெடிப்பில் தொடர்பு
இருப்பது தெரிய வந்துள்ளது இவர்கள் 2 பேரும் உத்தரபிரதேசம், கேரளா,
மராட்டியம் ஆகிய மாநிலங்களில் தீவிரவாதிகளை சந்தித்து ஆலோசனை நடத்தி இருப்பதும் தெரிய வந்துள்ளது.
சிமி தீவிரவாதிகளுக்கும், வளைகுடா நாடுகளில் உள்ள சிலருக்கும் தொடர்பு
இருப்பதையும் தீவிரவாதி கம்ருதீன் நகோரி தெரிவித்துள்ளான். அவர்களின்
பெயர், செல்போன் நம்பர் போன்ற விவரங்களையும் தெரிவித்துள்ளான்.
உளவுத்துறை ஆலோசனை
அவ்வப்போது தீவிரவாதிகள் நடமாட்டம் குறித்து உளவுத்துறை எச்சரிக்கை
விடுத்தும் குண்டு வெடிப்பு சம்பவங்கள் தொடர்ந்து நடப்பது மத்திய
அரசுக்கு கவலையை அளித்துள்ளது. இதுபற்றி விவாதிப்பதற்காக, டெல்லியில்
உளவுத்துறை அதிகாரிகளின் உயர்மட்ட ஆலோசனை கூட்டம், 2 நாட்களாக நடந்தது.
அதில், தமிழகம் உள்ளிட்ட 9 மாநிலங்களின் தீவிரவாத தடுப்பு போலீஸ்
அதிகாரிகள் கலந்து கொண்டனர். உளவுத்துறை இயக்குனர் பி.சி.ஹெல்தார்
தலைமையில் இக்கூட்டம் நடைபெற்றது. இதில், தீவிரவாதிகளின் அச்சுறுத்தல் மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.
தீவிரவாதிகள் அளித்த தகவல்கள் பரிமாறிக் கொள்ளப்பட்டன. 600
தீவிரவாதிகளையும் அடையாளம் கண்டு, அவர்களை கண்காணிப்பது குறித்தும் விவாதிக்கப்பட்டது.
மீண்டும் குண்டு வெடிப்புக்கு சதி?
தீபாவளி பண்டிகை நெருங்கி வருவதால், அதை சீர்குலைக்கும் வகையில்
தீவிரவாதிகள் மீண்டும் குண்டு வெடிப்பில் ஈடுபடலாம் என்று
கருதப்படுகிறது. அதை முறியடிப்பதற்கான அதிரடி விïகங்கள், இக்கூட்டத்தில்
விவாதிக்கப்பட்டன. தீவிரவாதிகள் நடமாட்டம் குறித்து கிடைக்கும் தகவல்களை ஒவ்வொரு மாநிலமும் மற்ற மாநிலங்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
Thursday, August 7, 2008
நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாகியுள்ள வங்கதேசத்தவர்கள்: உளவு நிறுவனங்கள் கடும் கவலை
இதுதொடர்பாக உளவு நிறுவனங்களின் அதிகாரிகள் கூறியதாவது:
வங்கதேசத்தில் இருந்து ஊடுருவி, இந்திய பகுதிக்கு வருபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. அடுத்த இரண்டு அல்லது மூன்று ஆண்டுகளில் கடல் மட்டம் உயர்ந்து, வங்க தேசத்தின் பல பகுதிகளை மூழ்கி விடும் அபாயம் உள்ளது.
அப்படி சில பகுதிகள் கடலில் மூழ்கினால், அந்தப் பகுதிகளைச் சேர்ந்தவர்கள் எல்லாம் நிச்சயமாக இந்தியாவுக்குள் சட்ட விரோதமாக ஊடுருவர். தற்போது இந்தியாவுக்குள் சட்ட விரோதமாக ஊடுருவி, வசிக்கும் வங்க தேசத்தவர்களின் எண்ணிக் கை ஐந்து கோடி. இந்த எண்ணிக் கை அடுத்த இரண்டு மூன்று ஆண்டுகளில் இரு மடங்காக அதிகரிக்கும். இப்போது ஆமதாபாத்தில் மட்டும், சட்ட விரோதமாக ஊடுருவிய ஒரு லட்சம், வங்க தேசத்தவர்கள் உள்ளனர். பெங்களூரு மற்றும் ஆமதாபாத்தில் சமீபத்தில் குண்டு வெடிப்புகள் நிகழ்ந்தன. சூரத்தில் பெரிய அளவில் வெடிகுண்டுகள் கண்டு பிடிக்கப்பட்டன. இவை அனைத்திற்கும், தாங்களே காரணம் என, "இந்தியன் முஜாகிதீன்" என்ற அமைப்பு தெரிவித்துள்ளது.
இந்தச் சதி வேலைகளை செய்ய அந்த அமைப்பு 200க்கும் மேற்பட்டோரை பயன்படுத்தியுள்ளது. அவர்கள் எல்லாம் வங்கதேசத்தில் இருந்து சட்ட விரோதமாக ஊடுருவிய நபர்களே. வங்கதேசத்தவர்கள் எண்ணிக் கை இந்தியாவில் அதிகரிப்பதால், இங்கு மட்டுமின்றி, உலக நாடுகள் பலவற்றிலும் பயங்கரவாத செயல்கள் அதிகரிக்கும். ஆப்கானிஸ்தான் உட்பட உலகில் சர்ச்சைக்கு இடமான பல நாடுகளில் நடந்த சதி செயல்களின் பின்னணியில் வங்க தேசத்தவர்கள் இருப்பதும் தெரியவந்துள்ளது.
ஒரு காலத்தில் சுதந்திரமான சமுதாயத்தை கொண்டிருந்த வங்கதேசம், கடந்த 10 ஆண்டுகளில் பழமைவாதிகள் மற்றும் மத பயங்கரவாதிகள் நிறைந்த நாடாக மாறி விட்டது. இப்படி பழமைவாத எண்ணங்களைக் கொண்டவர்கள் இந்தியாவிற்கு சட்ட விரோதமாக ஊடுருவது தொடர்ந்து நடந்தால், அது நாட்டின் பாதுகாப்புக்கு நிச்சயமாக அச்சுறுத்தலாகவே அமையும். அத்துடன் நாட்டிற்கு எதிரான இந்தச் சக்திகளை இனம் கண்டறிவதும் பாதுகாப்பு நிறுவனங்களுக்கு சிரமமானதாக இருக்கும்.
நமது அண்டை நாடான பாகிஸ்தானுடன் நாம் சுமூகமான உறவு கொண்டிருக்கவில்லை. அப்படிப்பட்ட சூழ்நிலையில், வங்கதேசத்தவர்கள் ஊடுருவலை கட்டுப்படுத்த தவறினால், அது ஆமதாபாத் மற்றும் ஜெய்ப்பூர் போன்ற பல குண்டு வெடிப்புகள் தொடர்ந்து நிகழ காரணமாகி விடும்.வங்கதேசத்தில் 2005ம் ஆண்டில் 100க்கும் மேற்பட்ட குண்டு வெடிப்புகள் நிகழ்ந்தன. இந்த குண்டு வெடிப்பிற்கு குறைவான சக்தி கொண்ட வெடி குண்டுகள் பயன்படுத்தப்பட்டிருந்தன. அதுமட்டுமின்றி, குண்டு வெடிப்புக்கு பின், 300க்கும் மேற்பட்ட வெடிகுண்டுகள் கண்டு பிடிக்கப்பட்டு செயல் இழக்கச் செய்யப்பட்டன.
அதேபோன்ற நிலைமைதான் சமீபத்தில் இந்தியாவில் காணப்பட்டது. அதாவது ஆமதாபாத் குண்டு வெடிப்பை தொடர்ந்து, சூரத்தில் வெடிகுண்டுகள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளன. மேலும், இந்தியாவுக்குள் ஊடுருவும் வங்க தேசத்தவர்களை, பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ., எளிதில் இனம் கண்டு பிடிப்பதோடு, குறைவான செலவில் சதி வேலைகளை அரங்கேற்ற அவர்களை பயன்படுத்திக் கொள்கிறது. எனவே, வங்க தேசத்தவர்களின் ஊடுருவலை தடுப்பதில் மத்திய அரசு முனைப்புடன் செயல்பட வேண்டும். இல்லையெனில், அது பேராபத்தாக முடியும். இவ்வாறு உளவு நிறுவன அதிகாரிகள் கூறினர்.
செய்தி: தினமலர்
Tuesday, August 5, 2008
இஸ்லாமிய பயங்கரவாதத்திற்கு ஆள்சேர்ப்பு மையமாக மாறிவரும் தமிழகம்: தினமலர்
பயங்கரவாதத்திற்கு ஆள் சேர்ப்பு மையமாக மாறி வரும் தமிழகம்: 'சிமி' தடையால் புதுப்புது பெயரில் அமைப்புகள் உருவாக்கம்
ஆகஸ்ட் 05,2008,00:00 IST
பயங்கரவாதத்திற்கு ஆள்சேர்ப்பு மற்றும் பயிற்சி மையமாக தமிழகம் மாறிவருகிறது. உத்தரப்பிரதேசத்தில் தொடங்கப்பட்ட 'சிமி' அமைப்பிற்கு உலகளாவிய பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்பு இருப்பது தெரிய வந்ததைத் தொடர்ந்து,2001ம் ஆண்டு செப்டம்பரில் அந்த அமைப்பிற்குத் தடை விதிக்கப்பட்டது. அவர்கள் வெவ்வேறு பெயர்களில் அமைப்புகளை ஏற்படுத்திச் செயல்பட்டு வருகின்றனர்.
இந்த அமைப்புகள் அனைத்தும், 'உலகம் முழுவதும் முஸ்லிம்களின் ஆளுகைக்குள் கொண்டுவர வேண்டும்' என்ற கொள்கையை மையமாகக் கொண்டு செயல்பட்டு வருகின்றன. இதற்காகப் பிற மதத்தினரை முஸ்லிம்களாக மதம் மாற்றுவது, அவ்வாறு மதம் மாறிய இளைஞர்களுக்குப் பயிற்சி அளிப்பதைப் பிரதான பணியாகக் கொண்டுள்ளன. இந்தப் பணி தமிழகத்தில் பரவலாக ஆங்காங்கே நடைபெற்று வருகிறது. வறுமையில் வாடுபவர்கள், இளம் விதவைகள், கணவரால் கைவிடப்பட்ட பெண்களை இலக்காகக் கொண்டு மதம் மாற்றுகின்றனர்.
குறிப்பாக, தஞ்சை மாவட்டம் திருப்பனந்தாள் தாலுகாவில் ஆதிதிராவிடர் இன மக்களை மதம் மாற்றும் சம்பவம் மிக வேகமாக நடைபெற்று வருகின்றன. இதற்கு இந்த சமுதாயத்தைச் சேர்ந்தவரும், நீலப்புலி அமைப்பின் தலைவருமான டி.எம்.மணி (சமீபத்தில் இவரும் முஸ்லிமாக மதம் மாறிவிட்டார்) பெருமளவு உதவி செய்து வருகிறார். வறுமை மற்றும் தீண்டாமை கொடுமையால் அவதிப்படும் இப்பகுதி மக்களிடம், இவற்றில் இருந்து விடுபட முஸ்லிமாக மதம் மாறுவது ஒன்றே சரியான தீர்வு என்ற வகையில் மதம் மாற்றி வருகின்றனர்.
இவைதவிர, பள்ளிகளில் படிக்கும் இளம் மாணவிகளை முஸ்லிம் இளைஞர்களைக் காதலிக்க வைத்து தங்கள் கட்டுப்பாட்டிற்குக் கொண்டு வருகின்றனர். பெண்ணைத் தேடி வரும் பெற்றோர்களிடம், மதம் மாறினால் பெண்ணை அனுப்புவதாக கூறுகின்றனர். தங்கள் குடும்ப கவுரவத்தைக் கருதி பலர் மதம் மாறுகின்றனர்.
சமீபத்தில் பாபநாசத்தில் டாக்டர் ஒருவரின் கிளினிக்கில் வேலை செய்த சகோதரிகள் இருவரை சென்னைக்கு அழைத்துச் சென்று தங்கள் கட்டுப்பாட்டில் வைத்து முஸ்லிமாக மதம் மாற்றினர். இந்தப் பெண்களின் பெற்றோர் சென்னை ஐகோர்ட்டில் "ஹேபியஸ் கார்பஸ்' மனு தாக்கல் செய்த பிறகே தங்களது மகள்களைப் பார்க்க முடிந்தது. இருப்பினும் அந்தப் பெண்கள் தாங்கள் விரும்பியே முஸ்லிமாக மதம் மாறியதாக கோர்ட்டில் கூறினர்.
இதுபோன்று பல்வேறு வகைகளில் பிற சமூகத்தினரை முஸ்லிம்களாக மதம் மாற்றி வருகின்றனர். மதம் மாறும் முதியவர்கள் மற்றும் பெண்களுக்கு கும்பகோணத்தில் உள்ள அன்பகத்தில் குரான் கற்றுத் தரப்படுகிறது.
இளைஞர்களுக்கு, நெல்லை மற்றும் தேனி மாவட்டங்களுக்கு அழைத்துச் சென்று அங்கு மாதக் கணக்கில் தங்க வைத்து பயிற்சி அளிக்கின்றனர். இங்கு என்ன பயிற்சி அளிக்கப்படுகிறது என்பது அந்தந்தப் பகுதிப் போலீசாருக்கே தெரிவதில்லை. அரசின் நிதியுதவியுடன் நடைபெறும் அரபிக் பள்ளிகளில் கூட போலீஸ் உள்ளிட்ட வெளியாட்கள் எவரையும் அனுமதிப்பதில்லை.
இவ்வாறு பிற மதத்தினரை முஸ்லிம் மதத்திற்கு மாற்றிட உள்ளூர் மற்றும் நாட்டின் பல்வேறு பகுதிகளில் உள்ள முஸ்லிம் அமைப்புகளும் பண உதவி அளிக்கின்றன. இவைத்தவிர, மதம் மாற்றும் நிகழ்ச்சியை 'சிடி' தயாரித்து, வெளிநாட்டில் உள்ள முஸ்லிம் அமைப்புகளுக்கு அனுப்புகின்றனர். அந்த அமைப்புகள், தமிழகத்தில் மதம் மாற்றும் பணியில் ஈடுபட்டுள்ள அமைப்புகளுக்குப் பெருமளவு நிதியுதவி அளித்து வருகின்றன. இந்த வெளிநாட்டு நிதியுதவி என்.ஆர்.ஐ. கணக்கில் அனுப்பி வைக்கப்படுகிறது.
'நெட் ஒர்க்கிற்கு எடுத்துக்காட்டு':
சென்னை ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கிக் கிளையில் பணியாற்றிய முஸ்லிம் பெண் ஊழியர் சில மாதங்களுக்கு முன் திருவாரூர் கிளைக்கு மாற்றலாகி வந்தார். அவர் முஸ்லிம் என்பதை அறிந்த உள்ளூர் முஸ்லிம் அமைப்பின் நிர்வாகிகள் சிலர் சந்தித்து மதக் கோட்பாட்டுப் படி 'பர்தா' அணிந்து பணிக்கு வர வேண்டும் என வலியுறுத்தினர். அந்தப் பெண் அதைப் பொருட்படுத்தாததால், ஆத்திரமடைந்த முஸ்லிம் அமைப்பினர், வங்கியில் பணி முடித்துவிட்டு வந்த பெண் ஊழியரை நடுரோட்டில் தாக்கினர்.
இதுகுறித்து அந்தப் பெண், சக ஊழியர்களின் உதவியுடன் திருவாரூர் போலீசில் புகார் செய்துவிட்டு விடுப்பில் சென்னைக்குச் சென்றுவிட்டார். அதை அறிந்த முஸ்லிம் அமைப்பினர், இரவோடு இரவாக சென்னையில் உள்ள தங்களது அமைப்பினரிடம் பேசினர். மறுநாள் காலை, அந்தப் பெண் போலீஸ் ஸ்டேஷனில் தொலைபேசியில் தொடர்பு கொண்டு தனது புகாரை வாபஸ் பெற்றுக் கொண்டார். தற்போது அந்தப் பெண் ஊழியர் வேறு ஊருக்கு மாற்றல் வாங்கி சென்று விட்டார்.
Sunday, August 3, 2008
பெங்களூரு, அஹமதாபாத் குண்டுவெடிப்புகளுக்கு கலிஃபோர்னியாவில் கண்டனக் கூட்டம்
ஆகஸ்ட் 3, 2008 அன்று மாலை நான்கு மணிக்கு சான் ஓசே, (கலிஃபோர்னியா மாநிலம், அமெரிக்கா) நகரின் மத்தியில் அமைந்த பூங்காவில் தீவீரவாதத்துக்குக் கண்டனம் தெரிவிக்கவும், இந்தியாவின் பெங்களூரு, அஹமதாபாத் நகரங்களில் குண்டு வெடிப்பில் இறந்தோர்க்கு அஞ்சலி செலுத்தவும் கூட்டம் ஒன்று நடத்தப்பட்டது.
யூத அமைப்புகளும் இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டு தமது கண்டனத்தைத் தெரிவித்தன. சான்ட்டா கிளாரா நகர மேயர், சான் ஓசே முன்னாள் மேயர் மற்றும் சில நகரசபைத் தலைவர்களும் கண்டனம் தெரிவித்தனர். 35 இந்திய அமைப்புகள் கலந்துகொண்டு கண்டனம் தெரிவித்தன.
இந்திய அமைப்புகளின் தலைவர்கள் பொத்தாம் பொதுவாகத் 'தீவிரவாதம், தீவிரவாதம்' என்று பேசிக் கொண்டிருந்தபொழுது யூதப்பெண்மணி ஒருவர் வந்து இவை இஸ்லாமிய பயங்கரவாதம், முஸ்லீம்கள் செய்யும் மதரீதியான தீவீரவாதம் என்று நெற்றியில் அடித்தாற்போல் பேசினார். அதன்பின் வந்தவர்கள் இந்த உண்மையை பகிரங்கமாகக் கூறத் தயங்கவில்லை. பாகிஸ்தானையும் ISI-ஐயும் இந்திய முஸ்லீம்களையும் கடுமையாகக் கண்டனம் செய்தார்கள். காஷ்மீர் அமைப்பைச் சேர்ந்த ஒருவர் கொந்தளிப்போடு பேசினார். POTA போன்ற சட்டங்களை மீண்டும் கொண்டுவந்து மக்களைப் பாதுகாக்க இந்திய அரசாங்கத்தைக் கோரித் தீர்மானம் இயற்றப்பட்டது. அமெரிக்க, இந்திய தேசீய கீதங்களுடன் நிகழ்ச்சி நிறைவுற்றது.
Saturday, August 2, 2008
நெல்லையப்பர் கோயிலுக்கு வெடிகுண்டு மிரட்டல்!
நெல்லையப்பர் கோவிலுக்கு வெடிகுண்டு மிரட்டல்
சனிக்கிழமை, ஆகஸ்ட் 2, 2008
நெல்லை: திருநெல்வேலி நெல்லையப்பர் கோவிலை வெடிகுண்டு வைத்து தகர்க்கப் போவதாக மிரட்டல் கடிதம் வந்துள்ளது. இதையடுத்து அங்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
பெங்களூர் மற்றும் அகமதாபாத்தில் தொடர் வெடிடுகுண்டு தாக்குதலைத் தொடர்ந்து தமிழக்த்தில் போலீஸார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். தமிழகத்தில் வெடிகுண்டு தாக்குதலை நடத்த இருந்த தீவிரவாதிகளின் சதி முறியடிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக தீவிரவாதிகள் அலி அப்துல்லா, நெல்லையைச் சேர்ந்த ஹீரா மற்றும் அப்துல் கபூர் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மதுரை மீனாட்சியம்மன் கோவிலும், திருநெல்வேலி அருள்மிகு நெல்லையப்பர் கோவிலும் தீவிரவாதிகளின் ஹிட் லிஸ்டில் இருந்ததால் அங்கு உச்சகட்டப் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
தீவிரவாதிகள் 3 பேரையும் ஒரே இடத்தில் வைத்து விசாரிக்க அவர்களை போலீசார் நேற்று நெல்லை கொண்டு வந்தனர். இந்நிலையில் நெல்லையப்பர் கோயில் நிர்வாக அதிகாரி தெய்வநாயகத்துக்கு நேற்று ஒரு மிரட்டல் கடிதம் வந்தது.
அதில், ஹீராவை விடுதலை செய்யாவிட்டால், நெல்லையப்பர் கோவில், சாலை குமார கோவில், திருவேங்கடநாதபுரம் கோவில்கள் வெடிகுண்டு வைத்து தகர்க்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.
இதையடுத்து நெல்லையப்பர் கோவில் உள்பட 3 கோவில்களுக்கும் உச்சகட்ட பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.