Showing posts with label முஸ்லிம். Show all posts
Showing posts with label முஸ்லிம். Show all posts

Friday, October 10, 2008

இஸ்லாமியரின் ரகசியக் கனவு

எழுத்தாளர் ஜெயமோகனின் வலைப்பதிவிலிருந்து சில பகுதிகள்...

-------------------
" பாகிஸ்தானில் இன்றுள்ள மாகாணங்களின் நிலையை வைத்து நோக்கினால் இன்று காஷ்மீருக்கு இருக்கும் அடிப்படை உரிமைகள் கூட இல்லாத ஒரு சர்வாதிகார அமைப்பின் கீழே சென்றுவிடத்தான் அவர்கள் ஆசைப்படுகிறார்கள். அந்த ஆசையின் அடிப்படை மதவெறிமட்டுமே. அது முல்லாக்களால் திட்டமிடப்பட்டு படிப்படியாக அங்கே உருவாக்கப்பட்டது. அதற்கு பாகிஸ்தானின் உளவமைப்புகளின் வெளிப்படையான ஆதரவும் பின்பலமும் இன்றும் உள்ளது. அந்த மண்ணின் மைந்தர்களான காஷ்மீரி பண்டிட்டுகளை கொன்று குவித்து அடித்து துரத்தியபின்னர்தான் அவர்களின் போராட்டம் ஆரம்பித்தது. காஷ்மீரிகள் தேடுவது எவ்வகையிலும் முற்போக்கான, மேலான ஒரு சமூக அமைப்பை அல்ல, மாறாக அவர்கள் தாலிபானிய அரசு ஒன்றை நாடுகிறார்கள். அவர்கள் இந்திய அரசை வெறுப்பது இது அடக்குமுறை அரசு என்பதனால் அல்ல, இது ஒரு தாலிபானிய இஸ்லாமிய அரசு அல்ல என்பதனாலேயே."

"வங்கதேசத்தின் மிகமோசமான வறுமையில் இருந்து தப்பி லஞ்சம் கொடுத்து இந்திய நிலத்துக்குள் ஊடுருவிய வங்க அகதிகள் அவர்களுக்கு எதிராக போடோ மக்கள் கிளர்ந்தெழுந்த கணத்தில் தங்கள் காலனிகள் முழுக்க பாகிஸ்தானியக் கொடியை ஏற்றியதை நாம் இப்போது காண்கிறோம். இந்த நாடு முழுக்க குண்டுகள் வைத்துஅழிப்பதில் வங்கதேசத்து அகதிகளின் பங்கு மிகப்பெரியது என கண்டடையப்பட்டிருக்கிறது. வாழ்வு தந்த இந்த நாட்டின்மீது குறைந்தபட்ச விசுவாசமும் பிரியமும் கூட அவர்களிடம் இல்லை. ஏனென்றால் அவர்களின் மதம் அவர்களுக்கு அப்படிக் கற்பிக்கிறது."

"காரணம் இஸ்லாம் என்பது அடிப்படையில் ஒரு தேசியகற்பிதம்– ஒரு மதமோ வாழ்க்கைமுறையோ மட்டும் அல்ல. அது பிற தேசிய கற்பிதங்களை ஏற்காது. அந்த தேசிய கற்பிதங்களுக்குள் தனித்தேசியமாக தன்னை உணர்ந்து அவற்றை உள்ளிருந்து பிளக்கவே முயலும். அது ஈழமானாலும் சரி இந்தியாவானாலும் சரி பிரிட்டனானாலும் சரி. இதுவே நிதரிசன உண்மை. எத்தனை தலைமுறைக்காலம் ஒரு நாட்டில் வாழ்ந்தாலும் சரி, அந்த நாட்டாலேயே மேன்மை பெற்றிருந்தாலும் சரி, அந்த நாட்டை மதநோக்கில் அழிக்க அவர்களுக்கு தயக்கம் இருக்காது என்பதைக் கண்டுகொண்டிருக்கிறது ஐரோப்பா."

"இஸ்லாம் எந்த பிற தேசத்துக்குள்ளும் அடங்காது என்ற அடிப்படை உண்மையில் இருந்து பிறக்கிறது காஷ்மீரின் யதார்த்தம். இன்றைய இஸ்லாமின் அடிப்படைக்கட்டமைப்புக்குள்ளேயே இந்த சிக்கல் இருக்கிறது. அதை தீர்த்துக்கொள்ளாதவரை இஸ்லாமியர்கள் அவர்கள் வாழும் நாடுகளெங்கும் தீராத அதிருப்தியுடன், வன்மத்துடன், அந்த நாடுகளை அழித்து அதன் மீது தங்கள் இஸ்லாமிய நாடுகளை உருவாக்கும் கனவுகளுடன் மட்டுமே வாழ்வார்கள். ஆகவே அவர்கள் மீது பிற தேசங்களின் ஐயமும் நீடிக்கும். உழைத்து துன்புற்று வாழும் எளிய முஸ்லீம்களை நிம்மதியாக வாழ ஒருபோதும் இஸ்லாமிய அடிப்படைவாதிகளும் முல்லாக்களும் விடமாட்டார்கள். எளிய லௌகீக வாழ்க்கையின் துயர்களில் துணைவரும்படி இறைவனை தொழுவதற்காக ஒவ்வொரு முறைச் செல்லும்போதும் ஓர் இஸ்லாமிய நாட்டுக்காக போராளியாகும்படியான அறைகூவலை எதிர்கொள்கிறான் சாதாரண முஸ்லீம்."

"இந்தியா தன் மூலதனத்தில் பெரும்பகுதியை செலவிட்டு போராடிக் கொண்டிருப்பது காஷ்மீரி மக்களின் சுதந்திரக்கனவுடன் அல்ல, பெரும் காழ்ப்புணர்வுடன், உச்சகட்டப் பிரச்சார வல்லமையுடன் பரப்பப்படும் இஸ்லாமிய உலகதேசியக் கனவுடன்தான். ருஷ்யா, சீனா உட்பட இஸ்லாமியக் குடிமக்களைக் கொண்ட எல்லா நாடுகளும் அந்த கனவுடன் போரிட்டுகொண்டுதான் இருக்கின்றன. காஷ்மீருக்குச் சுதந்திரம் கொடுத்தால் அந்தப் போர் முடிந்துவிடவும் முடியாது. இந்நூற்றாண்டின் பெரும் சவால் அது. அதைச் சந்தித்தேயாகவேண்டும். இதை எளிமையாக வரலாற்றைப் பார்க்கும் எவரும் புரிந்துகொள்ளலாம். அப்படியும் புரியாவிட்டால் தொடர்ந்து அருந்ததி ராயை மறுபிரசுரம் செய்துவரும் ஏதேனும் ஒரு இஸ்லாமிய அடிப்படைவாத இதழை எடுத்துப் புரட்டினால்போதும். இதில் ரகசியமேதும் இல்லை, வெளிப்படையான அறைகூவலையே காணலாம். "

"அடிப்படையான வரலாற்றுணர்வோ சமநிலையோ இல்லாத அருந்ததி போன்ற குருவிமண்டைகள் ஊடகங்களில் இன்றுபெறும் அதீத முக்கியத்துவம் மிகமிக ஆச்சரியமானது. கலை இலக்கியம் பொருளியல் அரசியல் எதைப்பற்றியும் கருத்து சொல்லும் ஒரு அனைத்துத்தளமேதையாக அவரை ஆங்கில ஊடகங்கள் முன்னிறுத்துகின்றன. அதற்கு பதிலாக அவர் அளிப்பது அவர்கள் நாடும் பரபரப்பை. அதற்கும் மேலாக இவர்களுக்குப் பின்னால் இந்த தேசத்தை அழிக்க எண்ணும் சக்திகளின் நிதியுதவிகள் இருப்பதற்கான வாய்ப்புகள் உண்டு என்பதே என் எண்ணம். கருத்தரங்க அழைப்புகள், விருதுகள், தன்னார்வஅமைப்புகள் வடிவில் நேரடி நிதியுதவிகள் என இந்திய இதழாளர்களுக்கு வரும் லஞ்சங்களை இங்கே எவருமே கண்காணிப்பதில்லை. பெரும் தொழிலதிபர்களுக்குரிய இரவு வாழ்க்கை வாழ்பவர்கள் நம் இதழாளர்களில் பலர் என்பதைக் கண்டிருக்கிறேன். ஆனால் அவர்கள் இந்திய ஜனநாயகத்தின் புனிதப் பசுக்கள்."

"இந்தியாவில் இன்று உருவாகியிருக்கும் மாவோயிசக் குழுக்கள் போன்றவை பத்துசதவீத உண்மையான மக்கள் அதிருப்தியின் மீது தொண்ணூறு சதவீதம் சீன ஆயுத பணபலத்தால் கட்டி எழுப்ப்பபடுபவை. இங்குள்ள இஸ்லாமிய குழுக்கள் மதக்காழ்ப்பின்மீது பாகிஸ்தானிய ஆயுத பணபலத்தால் கட்டி எழுப்ப்பபடுபவை.

இந்த எளிய நேரடி உண்மையை மழுப்பவும் நியாயப்படுத்தவும் கூலிபெற்று கிளம்பியிருக்கும் ஒரு பெரும் குழுவால் கையகப்படுத்தப்பட்டுள்ளது இந்திய ஊடகத்துறை. தேசிய மைய ஊடகத்தளத்தில் உள்ள இந்த வலுவான தரப்பு மெல்ல மெல்ல சுயமாக சிந்தனை செய்தறியாத பிராந்திய மொழி ஊடகங்களையும் பாதிக்கிறது. எப்போதும் இதை நாம் காணலாம். நமது சிற்றிதழ்களை ஆங்கில நாளிதழ்களின் ஞாயிறு இணைப்புகளே தீர்மானிக்கின்றன. ஒரு எழுத்தாளரைப்பற்றி ஆங்கிலநாளிதழ்களின் ஞாயிறு இணைப்பில் கட்டுரை வந்தால் அடுத்தமாதமே தமிழ் சிற்றிதழ்களிலும் கட்டுரைகள் காணப்படும்.

இத்தனைக்கும் அப்பால் மனசாட்சியை நம்பும் வாசகர் சிலர் இருக்கிறார்கள் என்பதே என் நம்பிக்கை. இந்த நாட்டைப்பற்றிய உண்மையான கவலை கொண்டவன், இந்தச் சமூகத்தின் உண்மைநிலையை தன்னைச் சுற்றிப் பார்த்தே தெரிந்துகொள்பவன். அவனிடம் பேச விரும்புகிறேன்.
தேசபக்தியே பாவமென்றாகிவிட்ட இச்சூழலில், முத்திரை குத்தப்பட்டு வசைபாடப்பட்டு, அவமதிக்கப்பட்டு, சிறுமைப்பட்டு நின்றபோதும் உரக்கச் சொல்வோம் நண்பர்களே.

"வெல்க பாரதம்!"
------------------------------

முழுக்கட்டுரையையும் வாசிக்க:

http://jeyamohan.in/?p=685

Thursday, September 11, 2008

விநாயகர் ஊர்வலத்துக்கு முஸ்லிம்கள் ஆதரவு by எழில்

Thursday, September 11, 2008

தமுமுக எதிர்ப்பை மீறி ஏராளமான முஸ்லீம்கள் விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்துக்கு ஆதரவு

மதநல்லிணக்கத்துக்கு எடுத்துக்காட்டாக திகழ்ந்து தமுமுக போன்ற மதவெறி அமைப்புகளை உதாசீனம் செய்யும் முஸ்லீம் பெருமக்களுக்கு வாழ்த்துக்கள்.

பழனியில் இந்து மக்கள் கட்சி சார்பில் விநாயகர் சிலை ஊர்வலம் முஸ்லிம்கள் வரவேற்பு

பழனி, செப்.7-

பழனியில் இந்து மக்கள் கட்சி சார்பில் விநாயகர் சிலைகள் ஊர்வலம் நடைபெற்றது. சால்வை அணிவித்து முஸ்லிம்கள் வரவேற்பு கொடுத்தனர்.

விநாயகர் சிலை ஊர்வலம் திண்டுக்கல் மாவட்டம் பழனியில் ஆண்டு தோறும் இந்து மக்கள் கட்சி, இந்து முன்னணி, சிவசேனா, பாரதீய ஜனசக்தி சார்பில் விநாயகர் சிலைஊர் வலம் நடைபெறுகிறது. இதில் இந்து மக்கள் கட்சி மற்றும் சிவ சேனா ஊர்வலங்களுக்குசின்ன பள்ளி வாசல் அருகே பழனி டவுன் முஸ்லிம் தர்ம பரிபாலன சங்கம் சார்பில் முஸ்லிம்கள் வரவேற்பு கொடுப்பது வழக்கம். இதனால் மத நல்லிணக்கத்துக்கு எடுத்துக்காட்டாக விநாயகர் சதுர்த்தி ஊர்வலங்கள் அமைகின்றன.

இந்த ஆண்டு பழனி டவுன் முஸ்லிம் தர்ம பரிபாலன சங் கம் சார்பில் வரவேற்பு கொடுப் பதற்கு தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் எதிர்ப்பு தெரிவித்து இருந்தது.

முஸ்லிம்கள் வரவேற்பு

இந்நிலையில் இந்து மக்கள் கட்சி சார்பில் பழனியில் நேற்று விநாயகர் சிலை ஊர்வலம் நடைபெற்றது. இதையொட்டி பழனி நகர் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் பிரதிஷ்டை செய்யப்பட்ட 20 விநாயகர் சிலைகள் பழனி முருகன் கோவில் வடக்கு கிரி வீதிக்கு எடுத்து வரப்பட்டன. பாத விநாயகர் கோவில் அருகே நடைபெற்ற நிகழ்ச்சியில் இந்து மக்கள் கட்சி மாநில தலைவர் அர்ஜுன் சம்பத் ஊர்வலத்தை தொடங்கி வைத்தார்.

ஊர்வலத்திற்கு வரவேற்பு கொடுப்பதற்கு தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகத்தினர் எதிர்ப்பு தெரிவித்து இருந்ததால் சின்ன பள்ளி வாசல் அருகே வரவேற்பு கொடுக்காமல் திருஆவினன்குடி கோவில் அருகே நேற்று பழனி டவுன் முஸ்லிம் தர்ம பரிபாலன சங்கத்தினர் வரவேற்பு கொடுத்தனர்.

சங்க செயலாளர் எம்.சாகுல் அமீது, நிர்வாக குழு உறுப்பினர்கள் சி. சாகுல்அமீது, கபூர்அலி, நிர்வாக ஆலோசகர் சையது அபுதாகிர், தலைவர் முஸ்தபா, துணைத்தலைவர் நாகூர் உசேன் ஆகியோர் திண்டுக்கல் மேற்கு மாவட்ட இந்து மக்கள் கட்சி அமைப்பாளர் சிவக்குமார் மற்றும் நிர்வாகிகளுக்கு சால்வை அணிவித்து வரவேற்பு கொடுத்தனர். பதிலுக்கு இந்து மக்கள் கட்சியினர் முஸ்லிம் சங்க நிர்வாகிகளுக்கு சால்வை அணிவித்தனர். இவ்வாறு மத நல்லிணக்கத்துக்கு எடுத்துக்காட்டாக ஊர்வலம் அமைந்து இருந்தது.

சிலைகள் சன்னதி ரோடு, அடிவாரம் பூங்கா ரோடு, திண்டுக்கல் ரோடு, காந்தி ரோடு, தெற்கு ரத வீதி, மேற்கு ரத வீதி வழியாக எடுத்து வரப்பட்டு தேரடி தெப்பக்குளத்தில் கரைக்கப்பட்டன. ஊர்வலத் தில் தப்பு, மேளம் ஆகிய இசைக் கருவிகளின் வாசிப்புக்கு ஏற்ப இளைஞர்கள் ஆடிப்பாடிச் சென்றனர். பாரத் மாதா கி ஜே போன்ற கோஷங்களை எழுப்பினர்.

பலத்த பாதுகாப்பு

ஊர்வலத்தில் இந்து மக்கள் கட்சி மாநில பொதுச் செயலாளர் அண்ணாத்துரை, திண்டுக்கல் மாவட்ட தலைவர் தர்ம ராஜா, ஒன்றிய தலைவர் செல்வன், செயலாளர் ஸ்ரீராம் பிரபு, மாவட்ட செயலாளர் கோபிநாத் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

ஊர்வலத்தையொட்டி திண்டுக்கல் மாவட்ட கூடுதல் சூப்பிரண்டு சிவானந்தம், பழனி துணை போலீஸ் சூப்பிரண்டு தங்கவேல் ஆகியோர் தலை மையில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. சிவில் சப்ளை தாசில்தார் சங்கரன், வருவாய் ஆய்வாளர் கண்ணன், கிராம நிர்வாக அலுவலர் பழனிச்சாமி மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.