Saturday, October 4, 2008

மாலை அணிந்த மாணவர்களுக்கு கிறிஸ்தவப் பள்ளியில் தடை- பரபரப்பு

நெல்லை: விரதம் இருந்து, மாலை அணிந்த மாணவர்களை பள்ளியில் இருந்து தலைமை ஆசிரியர் வெளியேற்றினார். பெற்றோர்களும், பாஜக மற்றும் இந்து முன்னணி அமைப்பினர் பள்ளியை முற்றுகையிட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

பாளையங்கோட்டை முருகன்குறிச்சியில் கதீட்ரல் மேல்நிலைப் பள்ளி உள்ளது. இங்கு வண்ணார்பேட்டை சாலை தெருவை சேர்ந்த முத்துராமலிங்கம் மகன் இசக்கி என்ற மாணவர் 8ம் வகுப்பு படித்து வருகிறார். அவர் குலசை முத்தாரம்மன் கோயில் தசரா விழாவுக்கு செல்வதற்காக மாலையணிந்து விரதம் இருந்து வருகிறார்.

இந்நிலையில் காலாண்டு தேர்வு விடுமுறைக்கு பிறகு பள்ளி நேற்று திறக்கப்பட்டது. இசக்கி மாலை அணிந்து பள்ளிக்கு வருவதை பார்த்த வாட்ச்மேன் ஸ்டீபன் வேதமாலை, இசக்கியை தடுத்து நிறுத்தி தலைமை ஆசிரியரிடம் அனுமதி பெற்று விட்டு வகுப்புச் செல்லுமாறு கூறினார்.

இதேபோல் மாலை அணிந்த மற்ற மாணவர்களையும் பள்ளிக்குள் அனுமதிக்கவில்லை. பிளஸ் 1 மாணவர் செல்வகுமார், 7ம் வகுப்பு சூர்யா உள்பட 15க்கும் மேற்பட்ட மாணவர்களிடம் தலைமை ஆசிரியர் மாணவர்களின் விளக்கம் கேட்டார்.

பின்னர், மாணவர்கள் பள்ளியை விட்டு வெளியேற்றப்பட்டனர். வீடு திரும்பிய இசக்கி பெற்றோரிடம் சம்பவம் குறித்து கூறி அழுதார்.

இதுகுறித்து தகவலறிந்த இந்து முண்ணனி மாவட்ட தலைவர் காந்திமதிநாதன், செயலாளர் உடையார், துணை தலைவர் வெட்டும்பெருமாள், பாஜக நிர்வாகி குற்றாலநாதன் உள்ளிட்ட நிர்வாகிகள், இசக்கியின் தந்தை முத்துராமலிங்கம் பள்ளியை முற்றுகையிட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

சம்பவம் குறித்து கல்வி அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையெனில் இந்து அமைப்புகள் சார்பில் பெற்றோர்களை திரட்டி போராட்டம் நடத்தப்படும் என்றும் இந்து முன்னணி மாவட்ட தலைவர் காந்திமதிநாதன் கூறியுள்ளார். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

http://thatstamil.oneindia.in/news/2008/10/04/tn-hindu-students-ousted-from-school-for-wearing-sacred.html

மத மாற்றப் பிரச்சாரத்தில் மாணவ – மாணவிகள் !

மத மாற்றப் பிரச்சாரத்தில் பள்ளி மாணவர்களை ஈடுபடுத்தியதால், பள்ளி நிர்வாகிகள் கைதுசெய்யப்பட்ட சம்பவம் கோவையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கைது நடந்ததால், பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டுள்ளது. ஹிந்துக்கள் தெய்வமாக வணங்கும் பகவான் ஸ்ரீ கிருஷ்ணரை இழிவுபடுத்தும் வகையில் துண்டுப் பிரசுரங்கள் வினியோகம் செய்யப்பட்டதால், பொதுமக்களில் சிலர் ஆத்திரம் அடைந்து, துண்டுப் பிரசுர வினியோகத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர். இதன் காரணமாகச் சிலர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

இதுபற்றி கோவையில் பல மட்டங்களிலும் விசாரித்து அறிந்த தகவல்கள் : சென்னையில் உள்ள ஈஸ்ட் கோஸ்ட் கிறிஸ்டியன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியைச் சேர்ந்த 120 மாணவ மாணவிகள், ஆறு வேன்களில் ஊட்டி சுற்றுலா செல்லும் வழியில் கோவை வந்துள்ளனர். கோவை காந்திபுரத்தில் கிராஸ்கட் ரோட்டில் வேன்களை நிறுத்திவிட்டு, பள்ளி நிர்வாகிகள் ஷாப்பிங் செய்யச் சென்றுள்ளனர். அப்போது, பள்ளி மாணவ மாணவியரிடம், இயேசு கிறிஸ்து பற்றிய பிரச்சார துண்டுப் பிரசுரங்களைக் கொடுத்து, பொதுமக்களிடம் வினியோகிக்கும்படிக் கூறியுள்ளனர். இவ்வாறு மாணவர்களால் வினியோகிக்கப்பட்ட பிரசுரங்களைப் பலரும் வாங்கிச் சென்றனர்.

அந்த வழியாக வந்த கோவையைச் சேர்ந்த ஆர். கிருஷ்ணகுமார் என்பவருக்கும் கொடுத்துள்ளனர். மதப் பிரச்சார பிரசுரத்தைப் படித்துப் பார்த்த
கிருஷ்ணகுமார், அங்குள்ள மாணவ மாணவிகளிடம் பேசியுள்ளார். "நீங்கள் நெற்றியில் செந்தூரம் வைத்துள்ளீர்கள். பொட்டு வைத்துள்ளீர்கள். ஹிந்து கடவுள் கிருஷ்ணரை இழிவுபடுத்தியுள்ள பிரசுரங்களைக் கொடுக்கலாமா?' என்று கேட்டுள்ளார். அதற்கு மாணவர்கள், "நாங்கள் எப்போது டூர் வந்தாலும் இதுபோல் கொடுக்கச் சொல்கிறார்கள்? நாங்கள் என்ன செய்வது?' என்று கூறியுள்ளனர். யூனிஃபார்ம் அணிந்த மாணவ மாணவிகளுடன் அவர் இவ்வாறு பேசிக்கொண்டிருந்தபோது, அங்கு வந்த பள்ளிக்கூட நிர்வாகிகள், கிருஷ்ணகுமாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.

"இதைப் படி' என்று அவரிடம் மீண்டும் ஒரு துண்டுப் பிரசுரத்தைக் கொடுத்த
பள்ளியைச் சேர்ந்த பெண்மணி ஒருவர், "இதைப் படித்தாவது இனிமேல் திருந்தி வாழுங்கள். உங்களுக்கெல்லாம் புத்தி வரட்டும்' என்று பேசியுள்ளார். இதையொட்டி வாக்குவாதம் முற்றியது

நடந்த சம்பவத்தைப் பற்றி கிருஷ்ணகுமார் கூறியது : ""மத மாற்றப்
பிரசுரத்தை நான் படித்தபோது, ரிக் வேதம், பாகவத புராணம், மஹாபாரதம்,
உபநிஷதம் உள்ளிட்ட ஹிந்து மத புனித நூல்களைப் பற்றி அவதூறான, பொய்யான விஷயங்கள் அதில் இருந்தன. மிகுந்த வேதனையும் அதிர்ச்சியும் அடைந்தேன். அவர்களிடம் விளக்கம் கேட்டபோது, வாக்குவாதம் நடந்தது. ஆணவமாகப் பேசினார்கள்.

என்னுடன் வந்த ஒருவரை அடித்துவிட்டனர். என்னையும் மிரட்டும் வகையில் பேசினர். அந்தக் கூட்டத்தில் இருந்த ஆன்டனி என்பவர், "ஏண்டா முட்டாள் பயல்களா? இயேசு வந்தும் கூட உங்களுக்குப் புத்தி வரவில்லையா?' என்று கேட்டார். அதற்குள்ளாக அங்கு பெரும் கூட்டம் கூட, பொதுமக்களில் பலர், "முதலில் இவர்களைப் போலீஸ் ஸ்டேஷனுக்கு அனுப்புங்கள்' என்று கூற, அதற்குள்ளாக போலீஸும் வந்து சேர்ந்தது. போலீஸில் புகார் கொடுத்துள்ளேன்'' என்றார்.

இந்த வகையான மதப் பிரச்சார பிரசுரங்களைக் கண்ட பொதுமக்களும், ஹிந்து அமைப்புகளும் கொதித்து எழுந்தனர். பி3 கோவை மாநகர காவல் நிலையத்தின் முன்பு கூடினர். பாரதிய ஜனதா மாநிலச்செயலாளர் ஜி.கே. செல்வகுமார், வி.ஹெச்.பி. கோட்டப் பொறுப்பாளர் ஆர்.எம். கணேசன், வழக்கறிஞர் பிரிவைச் சேர்ந்த ஸ்ரீதர் மூர்த்தி உள்ளிட்ட நிர்வாகிகள், தொண்டர்கள் போலீஸ் நிலையத்தின் முன்பு கூட, கோவை மாநகரம் பதட்டத்தின் உச்ச கட்டத்தை எட்டியது. இரவு 11 மணி வரை வழக்குப் பதிவு செய்யப்படாமல் சமாதான முயற்சியில் போலீஸார் இறங்கினர்.

இறுதியாக, ஹிந்து முன்னணி நிர்வாகி காடேஸ்வர சுப்ரமணி, போலீஸ் உயர் அதிகாரியிடம், "வழக்குப் பதிவு செய்யவில்லை என்றால், பந்த் அறிவிப்போம்' என்று கூறினார். அதையடுத்து நள்ளிரவு நேரத்தில் கோவை மாநகர காட்டூர் போலீஸார் எஃப்.ஐ.ஆர். பதிவு செய்தனர். பல்வேறு பிரிவுகளின் கீழ் சென்னையில் உள்ள ஈஸ்ட் கோஸ்ட் கிறிஸ்டியன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி தாளாளர், முதல்வர் உள்ளிட்ட 5 பேர் மீது வழக்குப் பதிவு செய்து சிறையில் அடைத்தனர். நிர்மலா பீட்டர், சாலமன், டேவிட், ஆன்டனி மற்றும் ஜீவானந்தம் ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

""கோவை அரசு மருத்துவமனை, மத்திய சிறை, கோவையைச் சுற்றியுள்ள
கிராமங்களில் இதுபோன்ற மதப் பிரச்சாரங்களை கிறிஸ்தவ அமைப்பினர்,
மத மாற்றப் பிரச்சாரமாகச் செய்து வருகின்றனர். போலீஸார் இந்த முறை
நடவடிக்கை எடுத்துள்ளனர். சிறுபான்மை, பெரும்பான்மை என்ற பாரபட்சம்
பாராமல் நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்று சொல்கிறார் ஹிந்து முன்னணி மாநிலப் பேச்சாளர் எல். சிவலிங்கம்.

பள்ளி மாணவ – மாணவிகளை மத மாற்ற வேலைக்கு உட்படுத்துவதை, இச்சம்பவம் வெட்ட வெளிச்சமாக்கியுள்ளது.

"ஹிந்துக்களின் கடவுளான பகவான் ஸ்ரீ கிருஷ்ணரை இழிவுபடுத்தும் விதமாகச் செய்த பிரச்சாரத்தால் பொதுமக்களும், ஹிந்து அமைப்புகளும்
கொதிப்படைந்தாலும், கட்டுப்பாடாக அமைதியுடன் போலீஸை அணுகியுள்ளனர். கட்டுப்பாட்டை மீறியிருந்தால் அசம்பாவிதம் ஆகியிருக்கும்'' – என்று அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் கூறுகிறார்கள்.

இச்சம்பவம் தொடர்பாக பள்ளி நிர்வாகத் தரப்பின் கருத்தை அறிய, துண்டுப்
பிரசுரத்தில் குறிப்பிடப்பட்டிருந்த டெலிஃபோன் நம்பரில் தொடர்பு
கொண்டபோது, சகோதரர் மோசஸ் என்பவர் பேசினார். ""கிறிஸ்தவ மதப் பிரச்சாரம் தொடர்பான நோட்டீஸ்களை வினியோகிக்க, பள்ளி மாணவர்களைப் பயன்படுத்தியது சரியா?'' என்று அவரிடம் கேட்டதற்கு, ""அதெல்லாம் இல்லை; அது முடிஞ்சு போச்சு'' என்பதையே சகோதரர் மோசஸ் திரும்பத் திரும்பக் கூறிவிட்டு, தொலைபேசி இணைப்பைத் துண்டித்துவிட்டார்.

- துக்ளக்கில் எஸ்.பி. சண்முகம்

Friday, October 3, 2008

ராம்லீலா நாடகத்தில் பக்தியுடன் நடிக்கும் முஸ்லிம் சகோதரர்கள்!

நன்றி: டைம்ஸ் ஆஃப் இந்தியா செய்தி

http://timesofindia.indiatimes.com/When_Rama_took_a_break_to_offer_namaz/articleshow/3553853.cms

When Rama took a break to offer namaz
3 Oct 2008, 1030 hrs IST, Manjari Mishra ,TNN

LUCKNOW: Masood Ahmad recalls the hush that fell when he went onstage to announce an unscheduled break during the raging battle between Lord Rama and Ravana, last Dussehra. The huge audience assembled at the Bakshi Ka Talaab ground was not amused. A few even began to boo, till the reason for the interruption was explained.

The Ramlila cast — including Rama, Ravana and Lakshman — Ahmad explained, needed to offer namaz and break roza . Not a single protest was heard thereafter. The show resumed only after the actors rolled up their prayer mats post-namaz and shared the iftari snacks — right on stage.

Masood Ahmad took over as manager of the BKT Ramlila Samiti from his father Muzaffar Hussain, who floated the outfit and also the concept of a mixed cast along with a Hindu friend in 1972. The move generated much curiosity and even a whisper campaign initially. But things have gradually settled down.

The casting coup of the year, says Ahmad, is the new Lord Rama — gawky 15-year-old Mohammad Sher Khan from BKT Higher Secondary School.

Khan, who’d been playing Bharat and Shatrughan for three years, is exultant about his elevation to lead status. ‘‘I have read Ramcharitmanas several times and particularly liked the ‘kirdar’ of Rama,” he declaims grandly. An unimpressed director, Sadiq Khan, exhorts the youngster, just back from school, to go over the script once more.

The stage props are garish, the make-up is loud and the costumes even louder at the dress rehearsal on B K T Gram Sabha land, 20 km from Lucknow. But they nevertheless serve as a soothing balm for nerves shredded by the Delhi, Gujarat and Malegaon blasts, and for the reverberations in nearby Azamgarh.

“All that blood and gore and the mutilated bodies shown on TV seem like part of a different world,’’ says 75-yearold Maqbool Ahmad, a carpenter from Nishatganj. Ahmad is still to get over the death of nine-year-old Santosh Yadav in the Mehrauli blast. He says, with a shudder, that the child could well have been his own grandson.

Thursday, October 2, 2008

Australia : Local Indian community celebrates old traditions

Local Indian community celebrates old traditions
BY NICK SOON
30/09/2008 12:00:00 AM
THE area's Indian community will celebrate early next month with a festival steeped in tradition.

Through the annual Navarathri and Vijayadasami Festival the community elders aim to pass on their Hindu cultural values and traditions to their children.


The festival will start with a cultural program hosted by children, from 6pm on October 10 at Crestwood High School, Baulkham Hills.


Event spokeswoman Akila Ramarathiam said a statue of Lord Venkateswara from the Venkateswara Hindu Temple in Wollongong would be brought to the festival.


She said that children would express their Hindu culture and traditional beliefs through music, dance and the chanting of prayers.


``The priest will also bring the Moorthy [statues] to the stage where the children are performing,'' she said. ``He will recite a special Puja [prayer] before encouraging the children to do the same.


``There will be chanting of Veda Chanting by Sydney Veda Patasala students, music and traditional dance performance by others and a talk.''


For more information, phone Subashree on 98942897 or Akila on 88147016.

http://blacktown.yourguide.com.au/news/local/news/general/local-indian-community-celebrates-old-traditions/1322945.aspx

MUSLIM BACK TO HINDUISM- WHY I REVERTED BACK TO HINDUISM