Friday, September 19, 2008

இலங்கையை சேர்ந்தவர் காஷ்மீரில் கைது

ஜம்மு, செப். 18: இலங்கையைச் சேர்ந்தவர் காஷ்மீர் மாநிலம் ஜம்முவில் கைது செய்யப்பட்டுள்ளார்.

இவரது பெயர் ஹசன் நவாஸ். இலங்கைத் தலைநகர் கொழும்பைச் சேர்ந்தவர். சட்ட விரோதமாக இந்தியாவுக்கு வந்திருப்பது விசாரணையில் தெரியவந்தது.

4 மாதங்களுக்கு முன் திருட்டுத்தனமாக இந்தியாவுக்கு வந்த அவர், மும்பை, தில்லி, மங்களூர், இமாசலப்பிரதேசம், பஞ்சாப் ஆகிய இடங்களில் சுற்றிவிட்டு கடந்த 5 நாள்களாக ஜம்முவில் தங்கியிருப்பதாக விசாரணையில் கூறினார்.

ஜம்முவில் உள்ள இன்டர்நெட் மையத்தில் தீவிரவாதிகளின் இணைய தளத்தைப் பார்த்துக் கொண்டிருந்தபோது அவரைப் போலீஸôர் கைது செய்தனர்.

அவரது நடவடிக்கைகளில் சந்தேகம் கொண்ட இன்டர்நெட் மைய உரிமையாளர் இது குறித்து போலீஸôருக்கு தகவல் கொடுத்தார். போலீஸôர் விரைந்து வந்து அவரைப் பிடித்து விசாரித்தனர்.

அவர் பயங்கரவாதச் செயல்களில் ஈடுபட திட்டமிட்டிருக்கலாம் என்று போலீஸôர் சந்தேகம் தெரிவித்தனர்.

தினமணி

No comments: