Saturday, June 7, 2008

திருவையாறில் 23ம் தேதி தியாகராஜர் ஆராதனை விழா

திருவையாறில் 23ம் தேதி தியாகராஜர் ஆராதனை விழா

Thyagarajar
தஞ்சாவூர்: திருவையாறில் வரும் 23ம் தேதியன்று சங்கீத சத்குரு தியாகராஜரின் 161வது ஆராதனை விழா தொடங்குகிறது.

தியாக பிரம்ம மகோத்சவ சபா சார்பில் தியாகராஜரின் 161வது ஆராதனை விழா வரும் 23ம் தேதி தொடங்குகிறது. இந்த விழாவை சட்டீஸ்கர் மாநில ஆளுநர் நரசிம்மன் துவக்கி வைக்கிறார். சபா தலைவர் ஜி.மூப்பனார் தலைமை வகிக்கிறார்.

23ம் தேதி துவங்கும் இந்த விழா 27ம் தேதி வரை நடக்கிறது. துவக்கவிழா அன்று மத்திய அமைச்சர் ஜி.கே.வாசன், மாவட்ட கலெக்டர் விஜயராஜ்குமார் உட்பட ஏராளமான இசைக் கலைஞர்கள் கலந்து கொள்கிறார்கள்.

தியாகராஜ ஆராதனை நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை துணை செயலாளர் குன்னக்குடி வைத்தியநாதன் உட்பட அனைத்து செயற்குழு உறுப்பினர்களும் செய்து வருகிறார்கள்.

நன்றி : தட்ஸ்தமிழ்

No comments: