Tuesday, August 12, 2008

தாவூத் இப்ராகிம் தம்பி அனீஸ் ஜெட்டாவில் கைது?

ஜெட்டா: தலைமறைவாக உள்ள அண்டர்வோர்ல்ட் தாதா தாவூத் இப்ராகிமின் தம்பி அனீஸ் இப்ராகிம் கஸ்கர் செளதி தலைநகர் ஜெட்டாவில் இன்று கைது செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது.

துபாயில் பதுங்கியிருந்த தாவூத் அண்ட் கோ இப்போது பாகிஸ்தானில் தலைமறைவாக இருந்து வருவதாக இந்திய உளவுத் துறை கூறி வருகிறது. ஆனால், அதை பாகிஸ்தான் மறுத்து வருகிறது.

இந்நிலையில் ஜெட்டாவுக்கு போலி பாஸ்போர்ட்டில் வந்திறங்கிய அனீஸை பின் தொடர்ந்த இந்திய உளவுப் பிரிவு அது குறித்து இன்டர்போலுக்கும் செளதி அரசுக்கும் தகவல் தந்தது.இதைத் தொடர்ந்து அவரை செளதி போலீசார் கைது செய்துள்ளதாக தகவல்கள் வருகின்றன. ஆனால், இதை உறுதிப்படுத்த முடியவில்லை.

1996ம் ஆண்டு மும்பை தொடர் குண்டு வெடிப்பில் முக்கிய குற்றவாளி அனீஸ் ஆவார். இவர் மீது சதி, ஏகே-47 துப்பாக்கிகள், வெடிகுண்டுகள் கடத்தல், பதுக்கள் உள்பட பல குற்றச்சாட்டுகளின் கீழ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

No comments: